Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

(1)

வரைபடத்தில்மீன்களை நீந்தவிடும் – ஒருமகா கலைஞனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.அவன்-பரப்பி வைத்தஆகாய விளைநிலத்துக் கீழ் நின்றுகாகங்கள் பறப்பதைமலைத்துப் போய்ப் பார்த்திருந்தான்.அந்நேரம்தூரப் பிரதேசத்தில் எங்கோஅவனது நுண்கலைகள் யாவும்விற்பனை கூட்டிக்கொண்டிருந்தன.

(2)

நீந்தவிட்டமீன்களை ஒவ்வொன்றாக எடுத்துகணக்கெழுதி வைத்திருந்தான் கலைஞன்.நான்திறந்த சமயம்அவனது கணக்குப் புத்தகம் முழுவதும்மீன்கள் நீந்தத் தொடங்கி இருந்தன.

(3)

தன் நூதனக் கலைகள் பூராவையும்பஞ்ச பூதங்களுக்குச் சமர்ப்பணம் செய்யவிருப்பதாகசொன்னான் கலைஞன்.’இதில் என்ன இருக்கிறது-நீதானம் செய்ய’ என்றேன்.’உனக்கெதுவும் புரியாது’ எனபுன்னகைத்தான்.அன்றென்ரசனைத் தடாகத்தில் சிலஅல்லிகள் மலர்ந்து திரிந்தன.

(4)

கலைஞனாக இருப்பதைப் பற்றிஒருநாள் என்னிடம்பெருமை பிதற்றிக்கொண்டான் கலைஞன்.’இதிலென்னதனி இன்பம் உனக்’கென்றேன்’புரிந்துகொள்’ எனஒரு தூரிகை தந்து மறைந்தான்!

(5)

அவனதுமீன் குஞ்சுகள்என் பிறவிப் பெருங்கடல்நீந்த அலைகின்றனஇப்போது!

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Follow

Get every new post delivered to your Inbox.